திருச்சி அருகே ஏரி உடைந்து வெள்ளம் - மாணவி பலி
திருச்சி: திருச்சி அருகே மழை காரணமாக ஏரி உடைந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அடித்துச் சென்ற மாணவி பரிதாபமாக இறந்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அதிகாலை 1 மணிக்கு ஆரம்பித்த மழை காலை 4 மணிவரை இடைவிடாது பெய்து தள்ளியது. இந்த மழையால் உடைகுளம்புதூர் ஏரி நிரம்பி வழிந்தது. உபரி நீர் தோளூர்பட்டி ஏரிக்கு திரும்பியது. இந்த ஏரியும் நிரம்பியது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 6 மணிக்கு தோளூர்பட்டி ஏரியின் ஒருபகுதி சுமார் 50 அடி நீளத்துக்கு திடீரென்று உடைந்தது. இதனால் ஏரியில் இருந்து நீர் வேகமாக வெளியேறியது. பயிர் நிலங்களில் தண்ணீர் புகுந்ததில் சோளம், கடலை, கம்பு பயிர்கள் நீரில் மூழ்கின.
ஏரி உடைப்பால் தொட்டியம்-தோளூர்பட்டி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதித்துள்ளது. இதனால் தோளூர்பட்டி, மின்னத்தம்பட்டி, சஞ்சீவிபுரம், சிவந்திப்பட்டி, காமலாபுரம் ஆகிய பகுதிகள் போக்குவரத்தின்றி பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவியும் பரிதாபமாக இறந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications