வெளிநாட்டு மாணவிகளை காரில் துரத்திய கும்பல் கைது
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவிகளை காரில் துரத்திய கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ரூவாண்டா நாட்டைச் சேர்ந்த மாணவி முசாபிமரியா என்ற மாரி ஜோஸி (22). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் கழகத்தில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோழிகளான கிளாரி (22), ஹோப் (22) ஆகியோருடன் சிதம்பரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுக்கு அருகில் ஐந்து வாலிபர்களும் சாப்பிட்டனர். பின்னர் அந்த வாலிபர்கள் மாணவி மாரி ஜோஸியிடம் பேச்சுக் கொடுத்தனர். அவரும் அந்த வாலிபர்களிடம் நட்பாக பேசினார்.
சாப்பிட்டு முடித்த மாரிஜோஸி மற்றும் அவரது தோழிகள் 2 பேர் ஆட்டோவில் முத்தையா நகரில் உள்ள தங்களது வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற ஆட்டோவில் அந்த ஐந்து வாலிபர்களும் காரில் பின் தொடர்ந்தனர்.
நடராஜபுரம் அருகே சாலையின் குறுக்கே காரை நிறுத்தி ஆட்டோவை மறித்தனர். இதை பார்த்து மாணவிகள் 3 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அட்ரஸ், போன் நம்பர்களை கேட்டு மாணவிகளை வாலிபர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன மாணவிகள் 3 பேரும் தப்பி ஓடினர். பின்னர் தங்களது நாட்டை சேர்ந்த மோசஸ் முரோரி என்பவரிடம் சம்பவத்தை கூறினார்கள்.
இதையடுத்து மோசஸ் முரோரி தனது நண்பர்களுடன் சென்று அந்த வாலிபர்களை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்களில் ஒருவர் மோசஸலை கல்லால் தாக்கினார்.
சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்தனர். இதை பார்த்த வாலிபர்கள் காரை அங்கேயே விட்டு தப்பி ஓடின. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காரையும் காருக்குள் இருந்த சிறிய ரக துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்கள் ஐந்து பேரில் (34), மணிகண்டன் (35), இளையராஜா (29) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். சிசுபாலன் அண்ணாமலை பல்கலையில் பிசியோ தெரபிஸ்ட்டாக பணியாற்றுகிறார்.
தப்பியோடிய செந்தில்பிள்ளை, அர்ச்சுனனை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் சிதம்பரம் 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications