பாக்.குக்கு சிதம்பரம் ஜமாத் கண்டனம்
சிதம்பரம்: பாகிஸ்தான் தனது நிலையை மாற்றிக் கொண்டு தீவிரவாத அமைப்புகளை வேருடன் களைய முன் வர வேண்டும் என்று சிதம்பரம் நகர முஸ்லீம் சுன்னத் ஜமாத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சிதம்பரம் நகர முஸ்லீம் சுன்னத் ஜமாத் கமிட்டி கூட்டம் அதன் தலைவர் ஹபீப் தலைமையில் நடைபெற்றது.
சிதம்பரம் நகர முஸ்லீம் சுன்னத் ஜமாத் செயலாளர் பாட்ஷா, துணைத் தலைவர் தஸ்தகீர், பொருளார் முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மும்பையில் உள்ள ரயில் நிலையத்திலும், தாஜ் ஹோட்டலிலும் தீவிரவாதிகள் நடத்திய வெறிச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில், இந்தியாவில் குண்டுகள் வெடிக்கச் செய்து மத மோதலை உருவாக்க நினைக்கும் அன்னிய சக்திகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பாகிஸ்தான் தனது நிலையை மாற்றிக் கொண்டு தீவிரவாத அமைப்புகளை வேருடன் களைய முன் வர வேண்டும் போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications