பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் இந்திய தலைவர் திடீர் நீக்கம்!
சத்யம் நிறுவனத்தின் ஆடிட்டிங் பணிகளை மேற்கொண்டது இந்த பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ்தான். இந்த மோசடி பூகம்பம் வெடித்து ஒரு ஆண்டுக்குப் பிறகு, பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸின் தலைமைப் பொறுப்பு அடியோடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்யம் நிறுவன மோசடி விவகாரத்தில் ராமலிங்க ராஜுவுக்கு இந்த நிறுவனம் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆடிட்டிங் நிறுவன அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன், சீனிவாஸ் தல்லூரி ஆகியோர் இதில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செபியின் புலனாய்வு அமைப்பும், பிரைஸ்வாட்டர்ஹவு ஸ்கூப்பர்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் ராமலிங்க ராஜூவின் மோசடிகளுக்கு எந்த அளவு உறுதுணையாக இருந்தனர் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளின் பின்னணியிலேயே ரமேஷ் ராஜன் விலக்கப்பட்டுள்ளார். 2007-ல் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் இந்தியப் பிரிவின் தலைவரான ரமேஷ் ராஜனின் பதவிக் காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன.
இந்த விலகல் குறித்து கருத்து கேட்டபோது, அது பற்றிப் பேசவே விரும்பவில்லை என்றதோடு முடித்துக் கொண்டார் ராஜன்.