தினசரி 2 மணி நேர மின் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர இதர ஊர்களில் தினசரி இரண்டு மணி நேரம் மின் தடை அமல்படுத்தப்படுகிறது. இதனால் தொழில் துறையினர் முதல் மாணவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
சென்னைக்கும் மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்குவதும், மற்ற ஊர்களை இருளில் ஆழ்த்துவதும் பாரபட்சமான செயல் என கண்டனக் குரல் பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக மின்வாரியத்தின் இந்த அணுகுமுறை, மக்களை ஜெனரேட்டர், யுபிஎஸ் போன்ற சாதனங்களை வாங்க தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது என தனது மனுவில் மருத்துவர் மீனாட்சி சுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'சென்னையை தவிர மற்ற இடங்களில் மின்தடையை ஏற்படுத்துவது மற்ற பகுதிகளில் வசிப்பவர்களை இரண்டாம் தர குடிமக்களை போன்று நடத்தும் செயலாகும். அரசியல் அமைப்பு சட்டப்படி அனைவருக்கும் சம உரிமை அளிக்க வேண்டும்.
இதுபற்றி தமிழக மின்வாரிய தலைவர், செயலாளர் ஆகியோருக்கு மனு கொடுத்தேன். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சென்னையை போன்று மற்ற பகுதிகளிலும் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிட வேண்டும்' என மீனாட்சி சுந்தரம் நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்த மனு வருகிற 5ம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications