தமிழ் வழக்கு மொழி: டெல்லியில் வழக்கறிஞர்களுடன் திருமாவளவன் போராட்டம்
சென்னை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாகக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்கு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சென்னை, மதுரை, உயர்நீதிமன்றக் கிளைகளில் செயலாற்றி வரும் வழக்கறிஞர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி சில ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 9-6-2010 முதல் 24-6-2010 வரை சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டம் நடத்தப்பட்டது.
வழக்கறிஞர்கள் பகத்சிங், ராஜேந்திரன், பாரதி, நடராஜன், எழிலரசு, ராஜா ஆகியோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடினர். எனினும் அக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்குறியதாகும்.
ஆகவே மீண்டும் இக் கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு வருகிற 25ம் தேதி டெல்லியில், மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.
இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை எனக்கு வழங்கி இருக்கும் நிலையில் தமிழ் தேசிய வழக்கறிஞர்கள், விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications