தமிழ் வழக்கு மொழி: டெல்லியில் வழக்கறிஞர்களுடன் திருமாவளவன் போராட்டம்
சென்னை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாகக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக உயர் நீதிமன்றங்களில் தமிழை வழக்கு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சென்னை, மதுரை, உயர்நீதிமன்றக் கிளைகளில் செயலாற்றி வரும் வழக்கறிஞர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி சில ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.
மதுரை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 9-6-2010 முதல் 24-6-2010 வரை சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டம் நடத்தப்பட்டது.
வழக்கறிஞர்கள் பகத்சிங், ராஜேந்திரன், பாரதி, நடராஜன், எழிலரசு, ராஜா ஆகியோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடினர். எனினும் அக் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனைக்குறியதாகும்.
ஆகவே மீண்டும் இக் கோரிக்கையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு வருகிற 25ம் தேதி டெல்லியில், மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.
இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்பை எனக்கு வழங்கி இருக்கும் நிலையில் தமிழ் தேசிய வழக்கறிஞர்கள், விடுதலை சிறுத்தைகள் வழக்கறிஞர்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications