எனது கடிதத்தை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பக் கோரியிருந்தேன்-நீதிபதி ரகுபதி
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜா நான் விசாரித்து வந்த வழக்கில் தலையிடுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அப்போது இருந்த எச்.எல்.கோகலேவுக்குத்தான் நான் கடிதம் எழுதியிருந்தேன். இருப்பினும் பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அக்கடிதத்தை அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்குமாறும் கோரியிருந்தேன். இருப்பினும் அது அனுப்பி வைக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி.
அமைச்சராக இருந்த ராஜா, பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் மூலம் நீதிபதி ரகுபதியின் விசாரணையில் தலையிட முயன்றதாக வெடித்துள்ள சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு தான் கடிதம் அனுப்பியதாக ரகுபதி கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தனக்கு அப்படி ஒரு கடிதம் வரவே இல்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தக் குழப்பம் குறித்து ஒரு நாளிதழுக்கு விளக்கியுள்ள நீதிபதி ரகுபதி, நான் 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலேவுக்கு கடிதம் எழுதினேன். அதில் நடந்த விவரங்களை விளக்கியிருந்தேன். இந்தக் கடிதத்தை நானே நேரில் சென்று தலைமை நீதிபதியிடம் அளித்தேன்.
பிரச்சினையின் தீவிரம் கருதி இந்தக் கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பார்வர்ட் செய்யுமாறும் கடிதத்தின் இறுதியில் கோரியிருந்தேன். கடிதம் கொடுத்ததோடு சரி, அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
நானே சந்திரமோகன் மீது கோர்ட் அவதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்திருந்தால் அது பாரபட்சமான நடவடிக்கையாக பார்க்கப்பட்டிருக்கும். அதனால்தான் நான் அதைச் செய்யவில்லை.
நான் எழுதிய கடிதம் தனக்கு வரவில்லை என்று முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியிருப்பது குறித்து நான் கருத்துக் கூற முடியாது. அவரிடம் இதுகுறித்து கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரகுபதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications