எனது கடிதத்தை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பக் கோரியிருந்தேன்-நீதிபதி ரகுபதி
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜா நான் விசாரித்து வந்த வழக்கில் தலையிடுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அப்போது இருந்த எச்.எல்.கோகலேவுக்குத்தான் நான் கடிதம் எழுதியிருந்தேன். இருப்பினும் பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அக்கடிதத்தை அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்குமாறும் கோரியிருந்தேன். இருப்பினும் அது அனுப்பி வைக்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி.
அமைச்சராக இருந்த ராஜா, பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் மூலம் நீதிபதி ரகுபதியின் விசாரணையில் தலையிட முயன்றதாக வெடித்துள்ள சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு தான் கடிதம் அனுப்பியதாக ரகுபதி கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தனக்கு அப்படி ஒரு கடிதம் வரவே இல்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தக் குழப்பம் குறித்து ஒரு நாளிதழுக்கு விளக்கியுள்ள நீதிபதி ரகுபதி, நான் 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலேவுக்கு கடிதம் எழுதினேன். அதில் நடந்த விவரங்களை விளக்கியிருந்தேன். இந்தக் கடிதத்தை நானே நேரில் சென்று தலைமை நீதிபதியிடம் அளித்தேன்.
பிரச்சினையின் தீவிரம் கருதி இந்தக் கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பார்வர்ட் செய்யுமாறும் கடிதத்தின் இறுதியில் கோரியிருந்தேன். கடிதம் கொடுத்ததோடு சரி, அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.
நானே சந்திரமோகன் மீது கோர்ட் அவதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்திருந்தால் அது பாரபட்சமான நடவடிக்கையாக பார்க்கப்பட்டிருக்கும். அதனால்தான் நான் அதைச் செய்யவில்லை.
நான் எழுதிய கடிதம் தனக்கு வரவில்லை என்று முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியிருப்பது குறித்து நான் கருத்துக் கூற முடியாது. அவரிடம் இதுகுறித்து கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார் ரகுபதி.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications