மறைந்த முன்னாள் கேரள முதல்வர் கருணாகரன் உடலுக்கு சோனியா அஞ்சலி
திருவனந்தபுரம்: மறைந்த முன்னாள் கேரள முதல்வர் கருணாகரனின் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்குகள் தொடங்கின.
கேரளாவில் நான்கு முறை முதல்வராக இருந்தவரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான 92 வயது கருணாகரன் நேற்று மரணமடைந்தார். தனது கடைசிக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய நெருக்கடி கொடுத்தவர் கருணாகரன். தனிக்கட்சியும் கண்டார். ஆனால் அவரால் அதில் வெற்றி பெற முடியவில்லை. மாறாக மீண்டும் காங்கிரஸையே சரணடைந்தார்.
கருணாகரனின் உடலுக்கு காங்கிரஸார் பெரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இன்று டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து கருணாகரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் வந்திருந்தார்.
பின்னர் கருணாகரனின் உடல் அவரது சொந்த ஊரான திருச்சூருக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் இறுதி யாத்திரை தொடங்கியது. பல்வேறு நகரங்கள் வழியாக திருச்சூருக்குக் கொண்டு செல்லப்படுகிறது கருணாகரனின் உடல்.
முன்னதாக மருத்துவமனையிலிருந்து கருணாகரனின் உடல் இன்று காலை எட்டே கால் மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வைக்கப்பட்ட உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
திருச்சூர் கொண்டு செல்லப்படும் கருணாகரனின் உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது. இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சூர் கொண்டு செல்லப்படும் வழியில், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக சிறிது நேரம் உடலை வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications