For Daily Alerts
Just In
சட்டசபை தேர்தல் : மேற்கு வங்கத்தில் பிரெய்லி ஓட்டுப்பதிவு இயந்திரம் அறிமுகம்
கொல்கத்தா: வரும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பார்வையற்ற வாக்காளர்களுக்காக பிரெய்லி முறையிலான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்து தொகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இது குறித்து மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்ததாவது,
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கொல்கத்தாவில் மட்டும் பிரெய்லி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த தடவை 294 தொகுதிகளிலும் அவை அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி குறியீடுகள் வைக்கப்படும். அவை மேற்கு வங்கத்தில் உள்ள 70 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்படும் என்றார்.
Comments
English summary
Electronic voting machines with Braille signs will be intorduced in all the 294 constituencies in West Bengal in the forthcoming assembly elections. This will help the visually impaired voters to cast their vote on their own.
Story first published: Wednesday, February 16, 2011, 16:03 [IST]