சட்டசபை தேர்தல் : மேற்கு வங்கத்தில் பிரெய்லி ஓட்டுப்பதிவு இயந்திரம் அறிமுகம்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: வரும் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பார்வையற்ற வாக்காளர்களுக்காக பிரெய்லி முறையிலான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்து தொகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இது குறித்து மூத்த தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்ததாவது,
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கொல்கத்தாவில் மட்டும் பிரெய்லி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் இந்த தடவை 294 தொகுதிகளிலும் அவை அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி குறியீடுகள் வைக்கப்படும். அவை மேற்கு வங்கத்தில் உள்ள 70 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications