தவறான இந்திய வரைபடத்தை ஆஸ்திரேலியா வாபஸ்: இந்தியர்கள் மகிழ்ச்சி
மெல்போர்ன்: தவறான இந்திய வரைபடத்தை வெளியிட்ட ஆஸ்திரேலிய அரசு இந்தியர்களின் எதிர்ப்பால் அதை வாபஸ் பெற்றுள்ளது.
அன்மையில் ஆஸ்திரேலிய அரசு இந்திய வரைபடத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டது. அதில் ஜம்மு காஷ்மீர், அருணாச்சல பிரதேச மாநிலங்கள் இல்லை. இதற்கு இந்தியா கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது. மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தவறான வரைபடத்தை இணையதளத்தில் இருந்து எடுத்தது.
இது குறித்து ஆஸ்திரேலிய அரசு அளித்துள்ள விளக்கம்,
இந்திய வரைபடத்தை ஐ.நா. விடம் இருந்து பெற்றோம். அதை சரியாகத் தெரியாமல் இணையதளத்தில் வெளியிட்டுவிட்டோம். இந்த செயலுக்காக நாங்கள் வருந்துகிறோம் என்று கூறியுள்ளது.
இந்திய வரைபடத்தை வாபஸ் பெற்றதற்காக சிட்னியில் உள்ள இந்தியர்கள், இந்திய ஆஸ்திரேலிய கவுன்சில் ஆகியவை மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.