3 மாவட்ட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திடீர் நீக்கம்: விஜயகாந்த் அதிரடி
மதுரை: திருவாரூர், கடலூர், தூத்துக்குடி மாவட்ட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திடீர் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் ஜெயபால், மன்னார்குடி நகர செயலாளர் மணிமாறன் ஆகியோர் கட்சிப் பொறுப்பில் நீக்கப்படுகின்றார்கள்.
அதே போன்று கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகர செயலாளர் சி.பி.ரமேஷ்குமார், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் நித்தியானந்த சரவணன், நெல்லை பகுதி செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், தச்சநல்லூர் பகுதி செயலாளர் கே.ஏ.எம்.சிவா, ஈரோடு நகர முதலாவது வார்டு செயலாளர் செந்தில் என்ற விஸ்வநாதன், 41-வது வார்டு செயலாளர் பாண்டியன், துணை செயலாளர் பிரபு, ஈரோடு வடக்கு மாவட்ட அவைத் தலைவர் மனோகர், மாவட்ட பொருளாளர் வி.பி. பெரியசாமி ஆகியோர் அவரவர்கள் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
மேலும், கடலூர் தெற்கு மாவட்டம் மாநில பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளர் பூ.ராஜமன்னன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் எஸ். ஸ்டாலின், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வி.எல். பாபு, நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒன்றிய செயலாளர் கேப்ரியல், மாவட்ட துணை செயலாளர் இஸ்மாயில்
ஆகியோர் அவர்கள் வகித்து வந்து பதவியில் இருந்து நீக்கி வைக்கப்படுகின்றார்கள்.
அதே போல தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் அழகர்சாமி, மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட பொறியாளர் அணி துணை செயலாளர் சுப்பையா என்ற சுரேஷ், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் ஆலந்தூர் நகர செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன் ஆகியோர் அவர்கள் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆனால் அவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்குரிய காரணத்தை அவர் விரிவாக விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications