தொடரும் பந்த்தால் இயல்பு நிலை பாதிப்பு- 10 தெலுங்கானா மாவட்டங்களும் முடங்கின

தெலுங்கானா போராட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்திய அரசு இந்த விஷயத்தில் அரசியல் செய்யப் பார்ப்பதால் ஆத்திரமடைந்துள்ள தெலுங்கானா கூட்டுப் போராட்டக் குழுவினர் 2 நாள் பந்த்தை அறிவித்தனர். மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு 70க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள், 12 அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்சிக்கள் என சரமாரியாக பதவி விலகவே மத்திய அரசு அரண்டு போயுள்ளது.
இந்த நிலையில் நேற்று தொடங்கிய 2 நாள் பந்த் காரணமாக தெலுங்கானா முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கிறது. சாலைப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள், வர்ததக மையங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன.
உஸ்மானியா பல்கலைக்கழககத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 2வது நாளாக பந்த் நடந்தது. இன்றும் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களும் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பஸ்களும் ஓடவில்லை.
அடுத்து பொருளாதாரத் தடையை ஏற்படுத்தும் வகையில் சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்தை தடுக்கும் போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாக தெலுங்கானா கூட்டுப் போராட்டக் குழு அறிவித்துள்ளதால் நிலைமை மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது.
ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?-ப.சி:
தனித் தெலுங்கானா கோரி ஆந்திராவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 98 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில் ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிடவில்லை என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், ஒரே நேரத்தில் பலரும் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சி வருத்தத்தில் உள்ளது என்றார்.
ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவின் இதர பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications