நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம்: வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரும் சுந்தரேச அய்யர்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையவர் விஜயேந்திரர், சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் உட்பட பலர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கிறது.
இந்த வழக்கிலிருந்து தப்புவதற்காக செசன்ஸ் நீதிமன்ற நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் பண பேரம் பேசியதாக தகவல் வெளியானது. இது தொடர்பான ஆடியோ சிடியும் வெளியானது.
இதையடுத்து புதுச்சேரி நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் 8 வாரங்கள் தடை விதித்தது.
இந நிலையில் சங்கர்ராமன் கொலை வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், எனது தரப்பு நியாயத்தையும் கேட்காமல் விசாரணை நடத்தக்கூடாது. மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர்களை பிரதிவாதியாக சேர்த்திருக்க வேண்டும். அந்த உரையாடல் சி.டி. பற்றி எனக்கு சமீபத்தில் தெரிய வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள என்னையும் இணைத்து, மனுவை விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications