வேலூர் சிறையில் நளினி - முருகன் சந்திப்பு... 30 நிமிடம் பேசினர்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் உள்ளனர். அவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை தொடர்ந்து அவர்களை தூக்கிலிடுவதற்கான தேதி குறிக்கப்பட்டது.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் தண்டனையை குறைக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தூக்குத் தண்டனையை 4 வாரத்திற்கு நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக சட்டசபையிலும் தண்டனையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற முருகனின் மனைவி நளினிக்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
சிறை விதிகளை மீறி செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நளினி. இந்த நிலையில் நளினி சில தினங்களுக்கு முன்பு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். பெண்கள் தனிப்பிரிவில் அடைக்கப்பட்டார்.
இன்று காலை 7.45 மணிக்கு கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையிலிருந்து அதன் எதிரே உள்ள பெண்கள் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறை வார்டன் முன்பு நளினியை முருகன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிட நேரம் நடைபெற்றது. பின்னர் பாதுகாப்புடன் முருகன் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முருகனின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே இந்த உருக்கமான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அவர் கடைசியாக சென்ற வருடம் முருகனைச் சந்தித்துப் பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications