மேலும் 100 கேள்விகள் பாக்கியிருப்பதால் நாளையும் பெங்களூர் கோர்ட்டில் ஆஐராகிறார் ஜெ.

14 வருடங்களாக பெங்களூர் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இதுவரை ஒருமுறை கூட ஜெயலலிதா ஆஜராகவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து இன்று அவர் முற்பகல் 11 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி மல்லிகார்ஜுனய்யா மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோர் 380 கேள்விகளைக் கேட்டு ஜெயலலிதாவிடமிருந்து பதில்களைப் பெற்றுப் பதிவு செய்தனர். பின்னர் ஜெயலலிதா கோர்ட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அவர் சென்ற பின்னர் வெளியே வந்த ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரிடம் நடந்தது என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த குமார், இன்று தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் 380 கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய பதிலை அளித்துள்ளார் முதல்வர்.
மேலும் 100 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட வேண்டும். எனவே நாளையும் அவர் விசாரணைக்கு ஆஜராகிறார். நாளை காலை மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார் என்றார் குமார்.
ஜெயலலிதாவிடம் கேள்விகள் கேட்டு முடிக்கப்பட்ட பின் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களான சசிகலா, இளவரசி உள்ளிட்டோரிடம் கேள்விகளை நீதிமன்றம் கேட்கும் என்று தெரிகிறது.
நாளை மீண்டும் ஆஜராக வேண்டிய ஜெயலலிதா, இன்று மாலை ஜெயலலிதா பெங்களூரிலிருந்து தனி விமானத்தில் சென்னை கிளம்பினார். நாளை அவர் மீண்டும் பெங்களூர் வரவுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications