ஆன்லைனில் போதைப்பொருள் விற்பனை: 12,000 பேர் கைது,300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
பீஜிங்: சீனாவில் ஆன்லைன் மூலமாக போதைப் பொருள் விற்பனை செய்த 12,125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 300 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் லான்ஜூ மற்றும் ஜியன் நகரில் ஆன்லைன் மூலம் போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது என்று போலீசாருக்கு கடந்த செப்டம்பர் மாதம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்டர்நெட் சென்டர்களை நோட்டமிடத் தொடங்கினர். அங்கு ஆன்லைனில் குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை கைது செய்யத் துவங்கினர்.
இதுவரை சுமார் 12,125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 300 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்கு குறிப்பிட்ட இணையதளங்கள் பொறுபேற்க வேண்டும் என்று சீன செய்தி நிறுவனமான ஜிங்குவா தெரிவித்துள்ளது.