டிஎன்பிஎஸ்சியை லஞ்ச ஒழிப்பு சட்ட வளையத்தில் கொண்டு வரலாமா?- அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது குறித்து இன்னும் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசார் கடந்த மாதம் 14ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின என்று கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி செல்லமுத்து உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கூறியதாவது,
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி கடந்த 80 ஆண்டு காலமாக தன்னாட்சி அமைப்பாக சுதந்திரமாக செயல்பட்டு வந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சட்டவிரோத செயலாகும். எனவே, இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினர்.
அவர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரம் குறித்து இன்னும் 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications