பஸ் கட்டண உயர்வை எதிர்த்து 'டிராபிக்' ராமசாமி வழக்கு-உயர்நீதிமன்றம் நாளை விசாரணை
சென்னை: பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக சேவகர் 'டிராபிக்' ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பொது நலன் வழ்ககு தொடர்ந்தார். இதை வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு ராமசாமி கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
இது குறித்து டிராபிக் ராமசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் சட்டத்தை சிறிதும் மதிக்காமல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறேன். இதை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எனது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்று நாளை விசராணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பு மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். பெட்ரோல் விலையை ஏற்றுகிறார்கள் என்றால் ஒரு நாளைக்கு முன்பே அது குறித்த செய்தி நாளிதழ்களில் வருகிறது. ஆனால் எந்தவித அறிவிப்பும் இன்றி பேருந்து கட்டணத்தை இரவோடு இரவாக உயர்த்தியிருக்கிறார்கள் என்றால் அது சட்டவிரோதமாகும். எனது மனுவில் இந்த கட்டண உயர்வை மக்கள் விரோதச் செயல் என்று குறிப்பிட்டுள்ளேன் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications