தலாய்லாமா விவகாரம் இந்தியா – சீனா எல்லை பேச்சு ரத்து
புது டெல்லி: தலாய்லாமா தலைமையில் புது டெல்லியில் நடக்க உள்ள புத்தமதக்கூட்டத்தை ரத்து செய்யுமாறு சீனா விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்க மறுத்து விட்டது. இதனால் இம்மாத இறுதியில் இந்தியா-சீனா எல்லை தொடர்பான பேச்சு வார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திபெத் புத்தமதத் தலைவர் தலாய்லாமா பங்கேற்க உள்ள புத்த மத மாநாடு, அடுத்தவாரம் புது டெல்லியில் நடைபெற உள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தலாய்லாமா சிறப்பு உரையாற்றுகிறார். இந்த மாநாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சீனா சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. அதனை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது. இது மதம் தொடர்பான நிகழ்ச்சி என்றும், அரசியல் தொடர்பான நிகழ்ச்சி இல்லை என்றும் தெரிவித்த இந்தியா மாநாட்டிற்கு தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டது.
பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
இதன் காரணமாக இந்தியா-சீனா இடையே எல்லை தொடர்பாக இரு நாட்டு, சிறப்பு பிரதிநிதிகள் இடையே நடைபெற இருந்த பேச்சு வார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் சீனாவின் சிறப்பு பிரதிநிதி டாய் பிங்காவோவும், இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி சிவசங்கர் மேனனும் டெல்லியில் சந்தித்து இந்திய-சீன எல்லையோரம் குறித்து 15ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலமாக இழுபறியில் உள்ள இந்த பேச்சுவார்தை தலாய்லாமா விவகாரத்தினால் தடைபட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications