கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்
சென்னை: டெல்லி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்புள்ள 250 டன் சந்தன மரம் மற்றும் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்த 2 முக்கிய குற்றவாளிகளை வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சந்தன மரங்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் இருந்து சந்தன மரங்கள் மற்றும் செம்மரங்களை வெட்டி டெல்லிக்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். பின்னர் டெல்லியில் இருந்து சீனா, மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது.
இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், டெல்லியில் உள்ள சில குடோன்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி மதிப்புள்ள 250 டன் சந்தன மரம் மற்றும் செம்மர கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சந்தன மரங்கள் மற்றும் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து நடத்திய விசாரணையில், நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரை சேர்ந்த மைதீன்(46) என்பவர் சந்தன மரங்களை கடத்தும் திட்டத்துடன் டெல்லியில் குடோனை வாடகைக்கு எடுத்தது தெரிய வந்தது.
சென்னையில் உள்ள ஒரு லட்ஜில் தங்கியிருந்த மைதீனை கைது செய்ய சென்னை வருவாய் புலனாய்வுத் துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் மைதீன் அதற்குள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு, பூனே செல்லும் விமானத்தில் ஏற வந்த மைதீனை, வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.
மைதீன் அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளியான செல்லதம்பி(35) என்பவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகின்றது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications