For Daily Alerts
Just In
எலைட் டாஸ்மாக் மதுக் கடைகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு
வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், புதிதாக மதுக்கடை திறப்பது இல்லை என்று 2008ல் அரசு முடிவெடுத்துள்ளது.
ஆனால் 2008ல் வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தமிழக அரசின் தற்போதைய முடிவு அமைந்துள்ளது.
அரசின் புதிய முடிவின்படி அடுத்த 5 ஆண்டுகளில் 800 எலைட் மதுக்கடை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மதுக்கடைகள் அதிகரிப்பால் மக்களின் ஆரோக்கியம், பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.
Comments
English summary
A Case has been filed against Elite Tasmac shops in Madras HC. The case will be heared tomorrow.
Story first published: Thursday, December 8, 2011, 12:08 [IST]