மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நீதிமன்றத்தில் சரண்
சங்கரன்கோவில்: திருவேங்கடத்தில் நடைபெற்ற மதிமுக பொதுக் கூட்டத்தில் அவதூறாக பேசிய வழக்கில் மதிமுக கொள்ளை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்று கொண்டார்.
சங்கரன்கோவில் தாலுக்கா திருவேங்கடத்தில் மதிமுக சார்பில் கடந்த 21.5.2010 அன்று பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து பேசினார்.
அவரது பேச்சில் அப்போதைய முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் திருவேங்கடம் நகர பஞ்சாயத்து தலைவர் செந்தாமரை கண்ணன் போலீடாரிடம் புகார் செய்தார். அதன் பேரில் நாஞ்சில் சம்பத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நாஞ்சில் சம்பத் மனு செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
இதனையடுத்து சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் நேற்று நாஞ்சில்சம்பத் சரண் அடைந்தார். பின்பு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications