தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் தாக்கப்பட்டது உண்மைதான்-உம்மன் சாண்டி ஒப்புதல்

புதன்கிழமையன்று மலையாள பத்திரிகை ஆசிரியர்களை கேரள முதல்வர் உம்மன்சாண்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணை பிரச்னையால் தமிழ்நாடு - கேரளா இடையே பதற்றம் ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டமானது. ஒருபுறம், அணையால் ஏற்பட உள்ள ஆபத்து பீதியை ஏற்படுத்துகிறது. மறுபுறம், இந்த விவகாரத்தால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மலையாள மக்கள் அச்சத்துடன் வாழ்வது கவலை அளிக்கிறது.
தாக்குதல் நடத்தப்பட்டது
கேரளாவில் சில இடங்களில் தமிழக ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடைபெற்றது உண்மைதான். கேரளாவில் வாழும் தமிழக மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை வரும் தமிழக பக்தர்களுக்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் குமுளி சோதனைச் சாவடியில் ஐயப்ப பக்தர்கள் உட்பட அனைவரையும் தடுத்து நிறுத்தியது உண்மைதான். ஆனால், ஒரு மணி நேரத்திலேயே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு யாரும் தடுக்கப்படுவது இல்லை.
தமிழக ஐயப்ப பக்தர்கள் மீதோ, அவர்களின் வாகனங்கள் மீதோ தாக்குதல் நடத்தினால், அது கேரளாவுக்குதான் பெரிய அவமானம்.
பதற்றம் ஏற்படுத்த கூடாது
அணை பிரச்னையை தீர்க்க, கேரளா மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதற்கும் தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கவில்லை. புதிய அணையை கட்டினால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்றும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீரை இடுக்கி அணைக்கு கொண்டு சென்று மின்சாரம் தயாரிக்க உள்ளதாகவும் தமிழ்நாட்டில் ஊடகங்கள் மூலம் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
எனவே, கேரளாவில் உள்ள பத்திரிகைகள், இரு மாநிலங்களுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடக் கூடாது.
பேச்சுவார்த்தைக்கு தயார்
அணை பிரச்னையை தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு கேரள அரசு எப்போதும் தயாராக உள்ளது. தமிழ்நாடு- கேரளா இடையே முதலில் அதிகாரிகள் மட்டத்திலும், பின்னர் அமைச்சர்கள் மட்டத்திலும், இறுதியில் இரு மாநில முதல்வர்களுக்கு இடையேயும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சித்தது. இதற்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை. கேரள மக்களின் அச்சம் நீங்க, புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வு. இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications