சிபிஐ உருவாக்கிய 'பொய் சாட்சி' தான் ஆசீர்வாதம் ஆச்சாரி: ராசா பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் 2ஜி வழக்கு விசாரணையில், ராசாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார், நீதிபதி ஓ.பி.சைனியிடம் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக ஆச்சாரி புகார் கூறியிருப்பதும் ஒரு நாடகம் தான் என்றும் ராசாவின் வழக்கறிஞர் கூறினார்.
அவர் வாதாடுகையில், ராசாவுக்கு எதிராக பொய் சாட்சி சொல்வதற்காக ஆசீர்வாதத்தை சிபிஐ தயார் செய்துள்ளது. இது தான் இந்த வழக்கில் முக்கிய வாதமே.
தன்னைக் கொல் முயல்வதாக ஆசீர்வாதம் நேற்று நீதிமன்றத்தில் கூறியதும் கூட சிபிஐ நடத்திய நாடகம் தான். ராசாவின் முன்னாள் செயலாளர் சந்தோலியாவின் ஜாமீன் மனு வரும் ஜனவரி 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடாமல் செய்யவே இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் தான் சந்தோலியாவுடன் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தவர் மூலம் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று ஆசீர்வாதம் திடீரென்று கூறுகிறார் என்றார்.
அப்போது இடைமறித்த நீதிபதி ஓ.பி.சைனி, இதற்கு முன் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆசீர்வாதம் ஏன் கூறவில்லை. இதை முன்பே அவர் கூறியிருந்தால், இந்த வழக்கில் பலருக்கும் ஜாமீன் கிடைத்திருக்காது என்றார்.
தொடர்ந்து வாதாடிய ராசாவின் வழக்கறிஞர், ஆசீர்வாதத்தை குறுக்கு விசாரணையும் செய்தார். முன்னதாக சிபிஐ தனது விசாரணையை முழுமையாக முடித்து, 3வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாத வரை நான் யாரையும் குறுக்கு விசாரணை செய்ய மாட்டேன் என்று ஒரு மாதமாக ராசா மறுத்து வந்தது குறிப்பிடத்தகுக.
கடந்த 12ம் தேதி சிபிஐ தனது 3வது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்ததையடுத்து ராசாவின் வழக்கறிஞர் தனது குறுக்கு விசாரணையைத் தொடங்கினார்.
ராசாவுக்கு எதிராக சிபிஐ நிறுத்தியுள்ள முக்கிய சாட்சி ஆசீர்வாதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் அதன் அதிபர்கள், அதிகாரிகளுக்கும் ராசாவுக்கும் இடையே இருந்த தொடர்புகள், விதிகளை மீறி லைசென்ஸ்கள் வழங்கப்பட்ட முறை ஆகியவை குறித்து ஆசீர்வாதம் அளித்த வாக்குமூலங்களையே சிபிஐ இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக முன் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்திய ராசாவின் வழக்கறிஞர், அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
நிரா ராடியாவிடம் பலமுறை ஆசீர்வாதம் பல்வேறு தொலைபேசி எண்களில் இருந்து மாற்றி மாற்றிப் பேசியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications