தானே புயல் எதிரொலி-கடலுக்குப் போகாத தூத்துக்குடி மீனவர்கள்
தூத்துக்குடி: கடலில் காற்று பலமாக வீசுவதாலும், புயல் எச்சரிக்கை காரணமாகவும் சென்னை, நாகை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் சென்னை, ராமேஸ்வரம், கடலூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட கடலோர துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
படகுகளை நிறுத்திய மீனவர்கள்
சென்னை துறைமுகத்தில் இரண்டாம் கட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு துறைமுகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலூர், புதுவை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.
எச்சரிக்கை நோட்டீஸ்
தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்திலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீ்ன்பிடி துறைமுகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இதனால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள 290க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதுபோல் ஆயிரக்கணக்கான நாட்டு படகுகளும் செல்லவில்லை. தூத்துக்குடி மட்டுமின்றி மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்களும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.
தானே புயலானது வரும் 30 ம் தேதி கடலூர் மற்றும் நெல்லூருக்கும் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications