சிங்கப்பூருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகளை கடத்த முயன்ற 3 பேர் கைது
சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகளை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வழியாக சிங்கப்பூருக்கு செல்லும் விமானம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது அவ்விமானத்தில் மருத்துவ குணமுள்ள அரிய வகை கடல் குதிரைகள் கடத்தப்படுவதாக, சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சுங்க இலாகா புலனாய்வு துறை அதிகாரிகள், விமான நிலையத்தில் இருந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது சிங்கப்பூர் செல்ல தயாராக இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சிக்கந்தர் அமீது(35), முகமது சிராஜூதின்(30), முகமது ரபீக்(35) உள்ளிட்ட 3
பேர் மீது புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்னுக்கு முரணாக பதில் அளித்தனர். மேலும் 3 பேரும் கொண்டு வந்திருந்த அட்டை பெட்டியில், சிங்கப்பூரில் உள்ள உறவினருக்கு வஞ்சிரம் மீன் கருவாடு கொண்டு செல்லவதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து அவர்களிடம் இருந்த அட்டை பெட்டியை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதற்குள் 130 கிலோ எடையுள்ள கடல் குதிரைகள் இருந்தன. இதன் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் கிடைக்கும் கடல் குதிரைகள், வெளிநாடுகளில் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் கடல் குதிரைகள் அழிந்து வரும் மீன் வகைகளில் ஒன்று என்பதால், வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications