மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்-200 படகுகள் சேதம்-8 மீனவர்கள் சிறை பிடிப்பு
ராமேஸ்வரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் வெறித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. 8 மீனவர்களை சிறை பிடித்துச் சென்று விட்டனர். பல மீனவர்கள் காயமடைந்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களை இந்த அடாத செயல் பெரும் அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
600க்கும் மேற்பட்ட படகுகளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். சர்வதேச எல்லைப் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சூழ்ந்து கொண்டனர். பின்னர் காட்டுமிராண்டிகள் போல கற்களை வீசித் தாக்கினர். இதில் பல மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
200க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. மேலும் மீனவர்கள் கரைக்குத் திரும்பிய பின்னர் பார்த்தபோது பாக்கியம்ஜோசப், ராஜமாணிக்கம், மாரியப்பன், விஜயகுமார், சின்னையா, செல்வராஜ், தமிழ்ச்செல்வம், மலைச்சாமி ஆகிய 8 மீனவர்களை காணவில்லை என்று தெரிய வந்தது. அவர்களை இலங்கைப் படை பிடித்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லாம் திருப்தியாக இருக்கிறது என்று கூறினார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. அங்கு என்ன பேசினார்கள் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், அந்தப் பேச்சுக்குக் கிடைத்த 'மதிப்பாக' இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.
தாக்குதலிலிருந்து தப்பி வந்த மீனவர்களில் ஒருவரான ஜஸ்டின்கூறுகையில், கற்களை தாறுமாறாக எங்கள் மீது எறிந்து இலங்கைப் படையினர் தாக்கினர். பெரிய பெரிய கற்களை அவர்கள் எடுத்து வந்து வீசினர். மேலும் மீன்பிடி வலைகளையும் அவர்கள் அறுத்துக் கடலில் போட்டனர் என்றார்.
தாக்குதலில் ஜெகதீசன் என்ற மீனவரின் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications