நவீன தொழில் நுட்ப ஆலை : மூடு விழா காணும் சிறு அரிசி ஆலைகள்
நெல்லை : நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வரும் நவீன தொழில்நுட்ப அரிசி ஆலைகளால் பழமையான அரிசி ஆலைகள் மூடு விழா காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில பிரதான தொழில் விவசாயமாகும். பாபநாசம் அணையின் முலம் 40 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நெல்லை அரிசியாக்குவதற்கு 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் படிப்படியாக தொடங்கப்பட்டன. இவற்றுக்கு தேவையான தொழிலாளர்கள் தட்டுபாடின்றி இருந்தனர். அறுவடையான நெல் ஆலையின் தொட்டியில் போட்டு தண்ணீரில் ஊற வைக்கப்படும். பின்னர் கொதிகலனில் அவித்து உலர்த்தப்படும். உலர்த்தப்பட்ட நெல்லை அறுவை இயந்திரங்கள் மூலம் அரிசியாக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுவர். இதனால் 24 மணி நேரமும் அரிசி ஆலைகளில் பணி நடைபெற்று வந்தன. தொழிலாளர்களுக்கும் தட்டுபாடின்றி வேலை கிடைத்து வந்தது. இந்த முறையில் தயாரான அரிசியால் சமைக்கப்படும் சாப்பாடு சுவையாகவும், சத்துடையதாகவும் இருந்து வந்தது.
நவீன அரசி ஆலைகள்
தொழில்நுட்ப வளர்ச்சியால் நவீன அரிசி ஆலைகள் அதிக முதலீட்டில் துவங்கின. அங்கு நெல்லை கொடுத்த ஒரு மணி நேரத்தில் அரிசியாக கிடைத்தது. இதனையடுத்து ஏராளமானோர் நவீன ஆலைகளை நாடத் தொடங்கினர்.
இவற்றுடன் சிறிய அரிசி ஆலைகளால் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டதால் பல ஆலைகள் படிப்படியாக மூடப்பட்டன. அரிசி ஆலை உரிமையாளர்கள் மாற்றுத் தொழிலை சிந்திக்க துவங்கி விட்டனர். இதனால் இந்த அரிசி ஆலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பிழைப்புத் தேடி வேறு ஊர்களுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications