இனி பணக்காரர்களுக்கு மட்டுமே குடியுரிமை.. இங்கிலாந்து அறிவிப்பு!

ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர்கள் இங்கிலாந்தில் கல்வி கற்ற பிறகு அங்கேயே பணிபுரிவதற்கான விசாவை ரத்து செய்வதாக ஏற்கெனவே அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதில் இந்தியர்களே பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாயினர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் பணி புரியும் ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர் ஒருவருக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்டு வருமானம் 31 ஆயிரம் பவுண்டுகளுக்கு குறைவாக இருந்தால் அவர்கள் சொந்த நாட்டிற்கே திரும்பிவிட வேண்டும் என்ற புதிய விதியை குடியேற்ற அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
ஆண்டு வருமானம் அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியர் போன்ற வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்கிற இங்கிலாந்து நாட்டவர், தங்களது மனைவிக்கு ஆண்டு வருமானம் 25 ஆயிரம் பவுண்ட்ஸ் என்று குறிப்பிட்டு விசா பெறுகின்றனர். இத்தகையோர் இங்கிலாந்து அரசிடமிருந்து நிதி உதவி பெறுவதை தடுக்கும் வகையில் இப்புதிய விதி நடைமுறைப்படுத்தப்படுகிறது.
புதிய குடியேற்ற விதிகள் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் டாமின் க்ரீன் இதனை சுட்டிக்காட்டடுள்ளார்.
இங்கிலாந்து நாட்டவரை திருமணம் செய்யக் கூடியவர் சுயமாக செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்று குடியேற்ற விதிகளில் கட்டாயமாக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும் வெளிநாட்டுப் பெண்களை திருமணம் செய்வோருக்கு ஆண்டு வருமானம் இவ்வளவு இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க உள்ளதாகவும் அமைச்சர் க்ரீன் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கு ஆண்டு வருமானம் 31 ஆயிரம் பவுண்ட்ஸில் இருந்து 49 ஆயிரம் பவுண்ட்ஸ் வரை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து அரசு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications