ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 4 மாதமாக அதிகரிப்பு: மார்ச் 10ல் அமல்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து ரயில்வேதுறை வட்டாரங்களில் கூறப்படுவதாவது,
ரயில் பயணத்துக்கு முன்பதிவு டிக்கெட் பெறுவதற்கான இடைவெளி, தற்போது 90 நாட்களாக உள்ளது. இதனை 120 நாட்களாக அதிகரிக்க, ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 10ம் தேதியில் இருந்து இந்த திட்டத்தை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக, ரயில்வே தகவல் தொடர்பு மென்பொருளில் மாற்றங்கள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், குறுகிய தூர ரயில்களுக்கு, முன் கூட்டியே டிக்கெட் பதிவு செய்யும் நாட்களில் மாற்றம் செய்யப்படவில்லை. 15 நாட்களுக்கு முன், டிக்கெட் பதிவு செய்யும் நடைமுறையே, தொடர்ந்து அமலில் இருக்கும் இவ்வாறு ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications