அரசு கப்பலின் கேப்டன் திடீர் மாயம்: காவல் நிலையத்தில் புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் பயிற்சி கேப்டனாக இருந்தவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மகன் கண்ணன் (23). அவர் பி.எஸ்.சி. நாட்டிக்கல் சயின்ஸ் படித்துவிட்டு அரசுக்கு சொந்தமான பூம்புகார் ஷிப்பிங் கார்பரேஷனின் எம்.வி. தமிழ் அண்ணா என்ற கப்பலில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு பயிற்சி கேப்டனாக சேர்ந்தார்.
இந்த கப்பலில் கடந்த 3ம் தேதி கொல்கத்தாவில் இருந்து ஒடிசா செல்வதாக கண்ணன் தனது தாயார் லட்சுமியிடம் போனில் கூறியுள்ளார். ஆனால் கடந்த 5ம் தேதி லட்சுமிக்கு மீண்டும் போன் வந்துள்ளது. எடுத்துப் பேசியபோது உங்கள் மகன் கண்ணனை காணவில்லை என்று கப்பல் கேப்டன் ரோஜர் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கப்பல் தளத்திற்கு வந்த அக்கப்பல் கேப்டனிடம் பயிற்சி கேப்டன் கண்ணன் காணாமல் போனது குறித்து பூம்புகார் ஷிப்பிங் கார்பரேஷன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், அங்கு வந்த கண்ணனின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து அவர் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications