வர்த்தக நிறுவனங்களுக்கான கேஸ் விலை ரூ.223 உயர்வு- டீ, காபி விலை உயரும்
சென்னை: தமிழகத்தில் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை ஒரே நாளில் ரூ.223 உயர்ந்துள்ளது. இதனால் டீ, காபி விலையை ஹோட்டல்கள் தாறுமாறாக உயர்த்தும் அபாயம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கு 15 கிலோ கேஸ் சிலிண்டரும், ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் உபயோகத்திற்கு 19 கிலோ சிலிண்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 15 கிலோ சிலிண்டர் ரூ.395க்கும், 19 கிலோ சிலிண்டர்கள் ரூ.1,667.50க்கும் விற்பனையானது.
எரிபொருட்களின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது. அதில இருந்து மாதம் ஒரு முறை வர்த்தக நிறுவனங்களுக்கான சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களாக மாதம் ரூ.100 அதிகரித்து வந்த நிலையில் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை நேற்று ஒரேயடியாக ரூ.223 உயர்ந்துள்ளது.
இதையடுத்து தற்போது 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,890க உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு முன்பு எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இருப்பதாக டீக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். கடந்த 1 ஆண்டில் மட்டும் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1,000 உயர்ந்துள்ளது.
பால் விலை, மின் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளதால் சில்லறை வர்த்தகம், சிறு கடை உரிமையாளர்கள் வியாபாரத்தை தொடர இயலாத நிலை ஏற்படும் என்று சிறு கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இது தவிர தனியார் நிறுவனங்களின் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலையும் ரூ.150 அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி ரூ.1,475க்கு விற்கப்பட்ட 17.5 கிலோ தனியார் கேஸ் சிலிண்டர் தற்போது ரூ.1,625க்கு விற்கப்படுகிறது.
வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதால் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆவின் பால் விலையும், தனியார் பால் விலையும் உயர்ந்தது. இதையடுத்து டீ, காபி விலை உயர்ந்தது. தமிழகத்தில் உள்ள பெரிய டீ, காபி கடைகளில் ஒரு டீ ரூ.6க்கும், பார்சல் டீ ரூ.15க்கும், காபி ரூ.10க்கும், பார்சல் காபி ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதையடுத்து டீ, காபி விலை மீண்டும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எல்லா டென்ஷனையும் குறைக்க ஏதாவது டீக்கடையைத்தான் சாதாரண ஜனங்கள் நாடுகிறார்கள். தற்போது அங்கும் விலை உயரப் போவதால் மக்கள் மேலும் டென்ஷனாகியுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications