சென்னை விமான நிலையத்தில் வாகன நிறுத்தத்துக்கான புதிய திட்டத்தால் குழப்பம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தால் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
புதிய திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டத்தின்படி பயணிகளை விமான நிலையத்துக்குள் வாகனங்கள் நுழையும்போது உள்ளே செல்லும் நேரத்தைக் குறிப்பிட்டு ஒரு ஸ்லிப் கொடுக்கப்படும். உள்ளே சென்ற 5 நிமிடத்துக்குள் வெளியேவராவிட்டால் ரூ60 அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.ஆனால் நடைமுறையில் இது சாத்தியமற்றது என்பதே உண்மை.
5 நிமிடம் சாத்தியமா?
உள்ளே செல்லும் வாகனம் பயணிகளை ஏற்றிக் கொண்டு அல்லது இறக்கிவிட்டு வருவதற்கு குறைந்தபட்சம் அரை மணிநேரமாவது ஆகும் என்பதே வாகன ஓட்டிகளின் கருத்து. இந்த நிலையில் ரூ60 அபராத கட்டணம் என்பது ஏற்க முடியாது என்கின்றனர் அவர்கள்.
மோதல் போக்கு
நியாயமற்ற அபராதத்தினால் வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் வசூலிப்போருக்கும் இடையே மோதல்தான் நடந்தேறுகின்றன. இந்த களேபரத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வாகனத்தை வெளியே நிறுத்தினாலும் அவர்களையும் போலீசார் அப்புறப்படுத்திவிடுகின்றனர்.
இதேபோல் அபராதக் கட்டணத்தை வசூலிக்க அமைக்கப்பட்டுள்ள பூத்களால் பயணிகளும் பொதுமக்களும் நடந்து செல்வதிலும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் வாகன நிறுத்தத்துக்கான புதிய திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை
-
பெரிய சதி.. அதானியின் ஒப்பந்தத்தை கைப்பற்றிய சீன நிறுவனம்! பின்னணியில் இவ்வளவு நடந்து இருக்கா? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications