நெல்லையில் இருந்து நாகர்கோவில், கோவா வழியாக மும்பைக்கு கோடைகால சிறப்பு ரயில்
நெல்லை: நெல்லையில் இருந்து மும்பைக்கு நாகர்கோவில், கோவா வழியாக கோடைகால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மத்திய ரயில்வே திருநெல்வேலி-மும்பை வழி தடத்தில் 01068/01067 எண் கொண்ட வராந்திர சிறப்பு ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து 01068 எண் கொண்ட ரயிலாக ஒவ்வொரு திங்கள்கிழமை மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வள்ளியூர், நாகர்கோவில் டவுன், இரணியல், குழித்துறை, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணணுர், மங்களுர், கோவா வழியாக செவ்வாய் இரவு 11:45 மணிக்கு மும்பை சேருகிறது. மறுமார்க்கத்தில் 01067 எண் கொண்ட ரயிலாக மும்பையிலிருந்து சனிக்கிழமை மாலை 4:55 மணிக்கு புறப்பட்டு திங்கள்கிழமை அதிகாலை 05:55 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது. இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து 33 மணி நேரம் 25 நிமிடங்களில் மும்பைக்கு போய் சேருகிறது.
குமரி மாவட்ட பயணிகளின் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் வள்ளியூர், இரணியல், குழித்துறை ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இவ்வாறு வள்ளியூர், இரணியல், குழித்துறை ரயில் நிலையத்தில் நின்று செல்வதால் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். இந்த ரயில் மூலம் கேரளாவிற்கு பல்வேறு தொழில்கள் நிமித்தமாக செல்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த ரயில் புகழ்பெற்ற சுற்றுலா இடமாக கோவா(மடகான்) வழியாக செல்கிறது சிறப்பம்சம் ஆகும். இந்த ரயிலில் குளிர்சாதன இரண்டு அடுக்கு ஒரு பெட்டி, குளிர்சாதன மூன்று அடுக்கு இரண்டு பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிகள் கொண்ட இருபது பெட்டிகள் மற்றும் மூன்று முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் உள்ளன.
இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்லும்போது வள்ளியூருக்கு மதியம் 1:40 மணிக்கும், நாகர்கோவிலுக்கு மதியம் 2:20க்கும், இரணியலுக்கு மதியம் 2:40 க்கும், குழித்துறை ரயில் நிலையத்துக்கு மதியம் 2:55 மணிக்கும் வந்து செல்கிறது. இதை போல் மறுமார்க்கம் குழித்துறைக்கு அதிகாலை 2:30 மணிக்கும், இரணியலுக்கு 2:50 மணிக்கும், நாகர்கோவில் டவுனுக்கு 3:05க்கும், வள்ளியூருக்கு 3:40 மணிக்கும் வருகிறது.
இந்த ரயிலின் கடைசி சேவை ஜுன் மாதம் முதல் வாரத்துடன் முடிகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடந்து கொண்டிருக்கின்றது. இந்த ரயிலை ஏராளமான குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் உபயோகித்தால் நிரந்தரமாக இயக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. ஆகவே கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் இந்த சிறப்பு ரயிலை அதிகமாக முன்பதிவு செய்து பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications