அணுசக்தி விவகாரம்: ஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகள் நாளை துருக்கியில் பேச்சு
இஸ்தான்புல்: ஈரானின் அணு சக்தி விவகாரம் தொடர்பான சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நாளை மீண்டும் நடைபெற உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ரசியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
ஈரான் அணுசக்தியை ஆக்கப்பூர்வமான விவகாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் - அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது என்பது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிலைப்பாடு. இதற்காக ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆற்றலை ஆயுதத் தயாரிப்புக்கே பயன்படுத்துகிறது என்பதால் போர்மூலமே தீர்வு காண வேண்டும் என்கிறது இஸ்ரேல். ஆனால் ஈரான் மீது உடனே போர் தொடுப்பது அவ்வளவு சரியான நடவடிக்கை எல்ல என்று அமெரிக்கா கருதுகிறது. ஈரானும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவும் விரும்புகிறது.
இதனால் ஒருகட்டமாக பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்க அமெரிக்கா முடிவு செய்தது. இதில் ஈரானின் நட்புநாடான சீனாவையும் உள்ளடக்கிக் கொள்ளவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
போரைத் தவிர்க்க, அணு உலைகளில் குறிப்பிட்ட விழுக்காடு யுரேனிய செறிவூட்டலை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன்பே முன்நிபந்தனையெல்லாம் விதிக்கக் கூடாது என்கிறது ஈரான்.
இந்நிலையில் துருக்கியில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே துருக்கி மத்தியஸ்தராக இருந்து இப்பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்துள்ளது.
போருக்கு தயாராகும் இஸ்ரேல்
பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இஸ்ரேலோ ஈரான் மீது போர் தொடுப்பதில் முனைப்பு காட்டியே வருகிறது.
ஈரானின் அண்டைநாடான அஜர்பைஜானில் ராணுவத் தளங்களை இஸ்ரேல் அமைத்திருக்கிறது. இதேபோல் ருமேனியா அரசையும் இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ல முடிவு செய்துள்ளது.
ஈரானின் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடையும் நிலையில் போரைத் தொடுப்பது என்பது இஸ்ரேலின் நிலை. இருப்பினும் இஸ்ரேல்- ஈரான் போரைத் தவிர்க்க வேண்டும் என்பதே இஸ்ரேலிய யூதர்கள் ஒருதரப்பினரின் கருத்தாக உள்ளது. தங்கள் மீது போர்தொடுத்தால் இஸ்ரேல் இல்லாமல் போய்விடும் என்று ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எங்களின் இறை தூதுவர் வருகிறார்.. ஓப்பனாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. ஓ இதுக்குத்தான் அட்டாக்கா! -
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் பயணிக்கலாம்.. ஈரான் அனுமதி.. ஜெய்சங்கர் தரமான சம்பவம் -
ஈரான் - அமெரிக்கா போர்.. நீங்கள் சாப்பிடும் மீன் உணவுகளை பாதிக்க போகுது! எப்படி தெரியுமா? -
ஈரானை ஏமாற்றிய இந்திய மாலுமி.. ஹார்முஸ் ஜலசந்தியை தந்திரமாக கடந்து மும்பை வந்து சேர்ந்தது எப்படி? -
துபாயில் பெரும் பணக்காரர்கள் பகுதியை தாக்கிய டிரோன்கள்.. குறி வைத்து அடித்த ஈரான்.. பதற்றம்! -
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டால் அரபு நாடுகளின் கதி? உணவு மற்றும் மருந்து சப்ளையில் யாருக்கு ஆபத்து? -
ஈரான் உச்ச தலைவர் சொன்ன மறுகணமே.. சீறி பாய்ந்த ஏவுகணைகள்! இஸ்ரேல் மீது 42வது அலை தாக்குதல் தொடங்கியது -
அமெரிக்க ராணுவ நிலைகள் மீதான தாக்குதல் தொடரும்.. ஈரானின் புதிய தலைவர் அறிவிப்பு! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
அண்ணே டேங்க ஃபுல் பண்ணுங்க..நாளைக்கு கிடைக்குமோ? கிடைக்காதோ? சென்னை பெட்ரோல் பங்குகளில் செம கூட்டம்! -
வீட்டிலிருந்தே வேலை.. IT ஊழியர்களுக்கு உடனே WFH! வல்லுனர் பரிந்துரை! பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி












Click it and Unblock the Notifications