அணுசக்தி விவகாரம்: ஈரானுடன் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகள் நாளை துருக்கியில் பேச்சு
இஸ்தான்புல்: ஈரானின் அணு சக்தி விவகாரம் தொடர்பான சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நாளை மீண்டும் நடைபெற உள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ரசியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
ஈரான் அணுசக்தியை ஆக்கப்பூர்வமான விவகாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் - அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடக் கூடாது என்பது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நிலைப்பாடு. இதற்காக ஈரான் மீது பொருளாதாரத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆற்றலை ஆயுதத் தயாரிப்புக்கே பயன்படுத்துகிறது என்பதால் போர்மூலமே தீர்வு காண வேண்டும் என்கிறது இஸ்ரேல். ஆனால் ஈரான் மீது உடனே போர் தொடுப்பது அவ்வளவு சரியான நடவடிக்கை எல்ல என்று அமெரிக்கா கருதுகிறது. ஈரானும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவும் விரும்புகிறது.
இதனால் ஒருகட்டமாக பேச்சுவார்த்தை நடத்திப் பார்க்க அமெரிக்கா முடிவு செய்தது. இதில் ஈரானின் நட்புநாடான சீனாவையும் உள்ளடக்கிக் கொள்ளவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
போரைத் தவிர்க்க, அணு உலைகளில் குறிப்பிட்ட விழுக்காடு யுரேனிய செறிவூட்டலை நிறுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்துகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு முன்பே முன்நிபந்தனையெல்லாம் விதிக்கக் கூடாது என்கிறது ஈரான்.
இந்நிலையில் துருக்கியில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே துருக்கி மத்தியஸ்தராக இருந்து இப்பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்துள்ளது.
போருக்கு தயாராகும் இஸ்ரேல்
பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இஸ்ரேலோ ஈரான் மீது போர் தொடுப்பதில் முனைப்பு காட்டியே வருகிறது.
ஈரானின் அண்டைநாடான அஜர்பைஜானில் ராணுவத் தளங்களை இஸ்ரேல் அமைத்திருக்கிறது. இதேபோல் ருமேனியா அரசையும் இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ல முடிவு செய்துள்ளது.
ஈரானின் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடையும் நிலையில் போரைத் தொடுப்பது என்பது இஸ்ரேலின் நிலை. இருப்பினும் இஸ்ரேல்- ஈரான் போரைத் தவிர்க்க வேண்டும் என்பதே இஸ்ரேலிய யூதர்கள் ஒருதரப்பினரின் கருத்தாக உள்ளது. தங்கள் மீது போர்தொடுத்தால் இஸ்ரேல் இல்லாமல் போய்விடும் என்று ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
குறிவைத்து அடித்த ஈரான்.. பற்றி எரியும் இஸ்ரேல் கப்பல்.. ஹார்முஸ் நீரிணையில் புதிய பிரச்சனை! -
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
கதவை தட்டும் ரெசிஷன்.. கச்சா எண்ணெய் 150 டாலர் தொடும்.. பயமுறுத்தும் கணிப்புகள் -
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக் -
துபாய் Oracle அலுவலகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
கல்யாண வீடு வரைக்கும் வந்த பிரச்சனை.. எரிபொருள் தட்டுப்பாட்டால் கெடுபிடி காட்டும் வங்கதேச அரசு! போச்சு -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications