லஞ்சம் வாங்கிக் கைதான ராஜனுக்கு கிடைத்தது ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: லஞ்சம் வாங்கியதாக கூறி கைது செய்யப்பட்ட சென்னை வருவாய் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி ராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
சென்னை விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடத்தல் தடுப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புப் பணிகளில் இருந்தவர் வருவாய் புலனாய்வுப் பிரிவு கூடுதல் டிஜிபி ராஜன். இவர் சமீபத்தில் லஞ்சம் வாங்கியதாக கூறி கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்தார் ராஜன்.
அதை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, ராஜன், அவரது டிரைவர் முருகேசன் மறுஉத்தரவு வரும் வரைதினமும் காலையில் சிபிஐ முன்பு ஆஜராக வேண்டு்ம் என நீதிபதி சுந்தரேஷ் நிபந்தனை விதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications