பாகிஸ்தான் அல்குவைதா அமைப்புக்கு புதிய தலைவராக பர்மான் நியமனம்!
டெல்லி: பாகிஸ்தானில் செயல்படும் அல் குவைதாவின் புதிய தலைவராக பர்மான் சின்வாரி அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அல்குவைதாவின் மூத்த தலைவரான பதார் மன்சூரின் மிகவும் நம்பிக்கைக்குரியவர் பர்மான் சின்வாரி என்று கூறப்படுகிறது. பர்மானின் நியமனம் தொடர்பாக வெளிநாடுகளில் செயல்படும் அல்குவைதா இயக்கத்தினரிடமும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளின் தந்தைதான் பர்மான்.
பர்மானின் சகோதரர்கள் அனைவருமே பாகிஸ்தானில் செயல்படக் கூடிய தெஹ்ரி- இ- தலிபான் உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்கள்.
அவரது மூத்த சகோதரர் ஹஸ்ரத் நபி சின்வாரி என்ற தமான்சி முல்லா, அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவர்தான் ஹர்கத் உல் முஜாகிதீன் அமைப்பின் தலைவராகவும் உள்ளார். பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் எல்லையில் இவரது இயக்கத்தினரே தலிபான்களுடன் கை கோர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications