கரூர் அருகே மப்பில் கலாய்த்த கார் டிரவைர்: மரத்தில் கட்டிவைத்து அடித்துக் கொன்ற மக்கள்
கரூர்: கரூர் அருகே கார் டிரைவரை மரத்தில் கட்டி வைத்து அடித்துக் கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள கிழிஞ்சல்நத்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(30). கார் டிரைவர். அவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர் தினமும் மது அருந்திவிட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரது இரு மனைவிகளும் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர்.
இதனால் கரூர் சுக்காலியூரை அடுத்த பண்டுதகாரன்புதூரில் உள்ள தனது அக்கா மீனா வீட்டில் ராஜா தங்கி இருந்தார். அங்கும் இதே போல போதையில் அக்கம் பக்கத்தினரிடம் தினமும் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (23) என்பவரை ராஜா தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் ஒன்று திரண்டு ராஜாவை ஊருக்கு வெளியே உள்ள கோயில் அருகே உள்ள வேப்பமரத்தில் கட்டிவைத்து உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்த அவரது அக்கா மீனா, அவரது கணவர் குமார் ஆகியோர் பொது மக்களிடம் மன்றாடியும் ராஜாவை அவர்கள் விடுவிக்கவில்லை.
இந்த நிலையில் அடி தாங்க முடியாத ராஜா சிறிது நேரத்தில் பிணமாக சாய்ந்தார். இதை பார்த்ததும் ராஜாவை தாக்கியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த எஸ்.பி. சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜா கொலைக்கு காரணமான அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி (30), மணிவண்ணன் (23), சுப்பிரமணி (37), சிவக்குமார் (18) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 10 பேரை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications