தொடர்ந்து 4வது ஆண்டாக ரூ. 15 கோடி மட்டுமே சம்பளமாக பெறும் முகேஷ் அம்பானி!

2008-09 ஆம் ஆண்டிலிருந்து முகேஷ் அம்பானி ரூ15 கோடியை மட்டுமே சம்பளமாக பெற்று வருகிறார்.
கடந்த 2010-11-ம் நிதி ஆண்டிலேயே முகேஷுக்கு ரூ38.82 கோடியை சம்பளாமாக வழங்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்திருந்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. மாறாக ரூ. 15 கோடி மட்டுமே போதும் என்று கூறி விட்டார். மீதித் தொகையை தமது நிறுவனத்துக்கே திருப்பிக் கொடுத்தார்.
2007-2008-ம் ஆண்டில் முகேஷ் அம்பானியின் ஊதியம் ரூ44 கோடியாக இருந்தது. அப்போது இந்திய தொழில் நிறுவனத் தலைவர்களில் கூடுதல் ஊதியம் பெற்றவர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. பின்னர் நிறுவன தலைமை செயல் அதிகாரிகளின் ஊதியத்துக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் ரூ15 கோடியை மட்டும் பெற்றுக் கொண்டார். தமக்கான அனைத்துப் படிகளையும் கூட நிறுவனத்துக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications