டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக ரிடையர்ட் ஐபிஎஸ் அதிகாரி நியமனம்
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஐ. ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டி.என்.பி.எஸ்.சி) உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஐ.ராசா நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் தனது 62வது வயது வரை இந்த பதவியில் நீடிப்பார் என்றும் தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4 போலீஸ் எழுத்தர்கள் சஸ்பெண்ட்:
சென்னையில் உள்ள 4 காவல் நிலையங்களில் பணிபுரியும் 4 எழுத்தர்களை கமிஷனர் திரிபாதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
வேப்பேரி, திருவல்லிக்கேணி, பூக்கடை, அண்ணா சதுக்கம் ஆகிய 4 காவல் நிலையங்களில் பணிபுரியும் 4 எழுத்தர்கள் புகார் கொடுக்க வரும் மக்களிடம் இருந்து புகார்களைப் பெறாமல் இழுத்தடிக்கின்றனர் என்று புகார் எழுந்தது. போலீஸ் உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பொதுமக்களை அலைக்கழித்த அந்த 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications