தாராளமா கேமரா கொடுங்க, வச்சுக்கிறேன்.. திருப்பனந்தாள் ஆதீனம் பதிலடி

மதுரை ஆதீன மட வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நித்தியானந்தா, என் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை ஆதீனங்களின் அறையிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தத் தயாரா. அப்படிச் செய்தால் எத்தனை பேர் மாட்டுவார்கள் தெரியுமா என்று சவால் விட்டிருந்தார்.
இதற்கு திருப்பனந்தாள் ஆதீனம் முத்துக்குமார சுவாமிகள் பதிலளித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய ஆதினத்தைப் பொறுத்தவரையில யாராவது கேமரா வைத்துக்கொடுத்தால் வைத்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று சொல்லுகிறேன். வெளியிலே நடப்பதுதான் உள்ளே தெரிகிறதே தவிர, உள்ளே நடப்பது வெளியிலே தெரியும்படியாக வைத்துக்கொண்டால் அது வரவேற்கத்தக்கது.
என்னுடைய ஆதினத்தைப் பொறுத்தவரையில் யார் வந்தாலும் எனக்கு நேராகவே தெரியும். எனக்கு எதிராக யாராவது விரோதமாக நடக்கிறார்கள் என்று சந்தேகம் இல்லை. எனவே எனக்கு அது தேவையில்லை. யாராவது கேமரா வைத்துக்கொடுத்தால் தாராளமாக பயன்படுத்திக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications