ஐ.ஜி. பிரமோத்குமார் சென்னை புழல் சிறையில் அடைப்பு
கோயம்புத்தூர்: திருப்பூர் பாசி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மேற்கு மண்டல ஐ.ஜி - பிரமோத்குமார் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது பாசி நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பலர் தங்களது பணத்தை முதலீடு செய்தனர். இதில் பாசி நிறுவனத்திற்கு ரூ 1,600 கோடி வரை முதலீடு சேர்ந்தது. ஆனால், முதலீட்டாளர்களுக்கு பணத்தை உரிய காலத்தில் திருப்பி தராததால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்குகள் சிபிஐ போலீசார் வசம் ஒடைப்படைக்கப்பட்டது.
இதனால், தலைமறைவாக இருந்த பாசி நிதி நிறுவனத்தின் இயக்குனர்களை சிபிஐ போலீசார் கைது செய்தனர். மேலும், திருப்பூர் பாசி நிறுவன மோசடி வழக்கை விசாரித்தபோது மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த பிரமோத்குமார், அதன் நிர்வாக இயக்குனரிடம் ரூ.2.93 கோடி லஞ்சமாகப் பறித்ததாகவும் புகார் எழுந்தது. இதன் பேரில் விசாரணை நடத்திய சிபிஐ போலீசார் கடந்த 2 ந் தேதி பிரமோத்குமாரை டெல்லியில் கைது செய்தனர்.
இதனையடுத்து, கோவையில் பிரமோத்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் 5 நாள் விசாரணை நடத்தினர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு, திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு சிறையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி.-யாக இருந்த போது குற்றவாளிகள் பலரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளேன். எனவே, நான் கோவை சிறையில் இருந்தால், அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று சிறை கண்காணிப்பாளர் முருகேசனிடம் பிரமோத்குமார் மனு அளித்தார். இதை ஏற்றுக் கொண்டு பிரமோத்குமாரை சென்னை புழல் சிறைக்கு மாற்றியுள்ளனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications