சௌரிய சக்ரா விருது பெற்ற மேஜர் கார்த்திக் ராஜாவுக்கு ஜெயலலிதா ரூ.5 லட்சம் பரிசு

முப்படைகளில் வீரதீர செயல் மற்றும் சிறப்பாக பணியாற்றியமைக்காக விருது மற்றும் பதக்கம் பெறும் தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு பண முடி வழங்கி கௌரவித்து வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் பண முடியை கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி அன்று உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அதன்படி சௌரிய சக்ரா விருது பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.45,000க்கான பணமுடி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம், துபால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேஜர் எஸ்.கார்த்திக் ராஜா ஒரு படையை அழைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு சென்றார்.
அங்கு தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் தீவிரவாதிகளுடன் சண்டைபோட்டு அதில் 5 தீவிரவாதிகளையும் கொன்று போர் தளவாடங்களையும், பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினார். இதையடுத்து ராணுவத்தில் தீரத்துடனும், உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றுவோருக்கும், தீவிரவாத தடுப்பு தாக்குதலின்போது தீரத்துடன் பணிபுரிவோருக்கும் வழங்கப்படும் சௌரிய சக்ரா விருதுக்கு கார்த்திக் ராஜா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த விருதை குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார்.
சௌரிய சக்ரா விருது பெற்ற தமிழக வீரர் கார்த்திக் ராஜாவின் தீரத்தை பாராட்டி முதல்வர் அவருக்கு ரூ.5 லட்சம் பணமுடி வழங்கி பாராட்டினார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications