விஸ்வநாதன் ஆனந்துக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
சென்னை: உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று தாயகம் திரும்பிய விஸ்வநாதன் ஆனந்துக்கு ரசிகர்கள் சென்னை விமான நிலையத்தில் ஆடல் பாடலுடன் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.
ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நடந்த உலக செஸ் போட்டியில், இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் டைபிரேக்கரில் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் இஸ்ரேல் கிராண்ட்மாஸ்டர் போரிஸ் ஜெல்பான்ட்டை தோற்கடித்து 5-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். அவரது சாதனையை பாராட்டி அவருக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சாம்பியன் பட்டத்தை வென்ற ‘செஸ் சக்கரவர்த்தி’ ஆனந்த் தனது சொந்த ஊரான சென்னைக்கு திரும்பினார். ரஷியாவில் இருந்து சனிக்கிழமை 9.15 மணிக்கு சென்னை வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள், செஸ் சங்க நிர்வாகிகள் ஆரவாரமான வரவேற்பு கொடுத்தனர். ஆனந்துக்கு ஆளுயர மாலையும், மலர் கிரீடமும் அணிவிக்கப்பட்டது. அவரை வரவேற்கும் விதமாக தப்பாட்டம், ஒயிலாட்டம், மேளதாளம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. வேலம்மாள் பள்ளி மாணவ, மாணவிகள், என்.ஐ.ஐ.டி. நிறுவன நிர்வாகிகள், ஊழியர்களும் திரளாக நின்று ஆனந்துக்கு வாழ்த்து மழை பொழிந்தனர்.
தமிழக அரசு சார்பில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளர் ராஜ்குமார், எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். ஆனந்தை சந்தித்து பேச ரசிகர்களும், ஊடகத்தினரும் ஒருவரையொருவர் முந்தி கொண்டு சென்றதால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் மிகவும் சிரமப்பட்டனர்.
தனக்கு அளித்த வரவேற்பிற்கு ஆனந்த் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது. என்னை வரவேற்று கவுரவப்படுத்துவதற்காக இவ்வளவு ரசிகர்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசுக்கும் குறிப்பாக எனது சாதனையை அங்கீகரித்து ரூ.2 கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்-அமைச்சரை விரைவில் சந்தித்து வாழ்த்து பெறுவேன். பள்ளிகளில் செஸ் பாட திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பது, செஸ் விளையாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இதன் மூலம் பல செஸ் சாம்பியன்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும்” என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications