சர் கிரீக் தொடர்பாக டெல்லியில் இந்தியா -பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை
டெல்லி: அரபிக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியான சர்ச் கிரீக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா மற்ரும் பாகிஸ்தான் நாடுகளிடையேயான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் தொடங்கியது.
அரபிக் கடலில் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தையும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியையும் பிரிக்கக் கூடிய சர்வதேச எல்லைப் பகுதியாக சர் கிரீக் பகுதி இருந்து வருகிறது. நீண்ட்காலமாக இந்தியா- பாகிஸ்தான் இடையே இருந்து வரும் எல்லைப் பிரச்சனிஅகளில் இதுவும் ஒன்றாகும். இருநாடுகளும் இதற்கான போரிட்டும் இருக்கின்றன. இந்தப் பகுதியில் பறந்த இந்திய விமானப் படை விமானத்தை 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதில் 16 படையினர் உயிரிழந்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சர் கிரீக் பகுதி முழுதும் தமக்கே சொந்தம் என்று பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால் இந்தியா இதனை நிராகரித்து குறிப்பிட்ட ஒரு எல்லை வரைதான் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்று கூறி வருகிறது.
இந்தப் பிரச்சனை தொடர்பாக இந்திய- பாகிஸ்தான் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று காலை டெல்லியில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இருதரப்பும் ஏற்கக் கூடிய முடிவு எட்டப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்தவாரம்தான் சியாச்சின் பனிமலை விவகாரம் தொடர்பாக இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications