உ.பி. தலித் பெண் பலாத்காரம்: எஸ்.பி உட்பட 4 அதிகாரிகள் இடைநீக்கம்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரபிரதேசத்தில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக, மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் உட்பட 4 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் கடந்த 23ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து மாவட்டத்தில் ஆங்காங்கே தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதாப்கர் மாவட்ட ஆட்சியர் ஓய்.கே.ராகல், மாவட்ட எஸ்.பி ஓ.பி.சாகர், வட்ட அதிகாரி குந்தா பிஎஸ் ராணா, நீதிபதி ராம் பிரகாஷ் மிஸ்ரா ஆகிய 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நடைபெற்ற தீவைப்பு சம்பவங்களின் போது மேற்கண்ட 4 பேரும், அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications