மாற்றுத் திறனாளி மகளைக் கருணை கொலை செய்ய அனுமதி கோரிய தாய்
ஈரோடு: மாற்றுத் திறனாளியான தமது மகளை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அவரது தாய் மனு அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் அழகர் - ஜெயா தம்பதியினருக்கு 1999-ல் பெண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதலே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இக் குழந்தைக்கு பல இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இப்போது 14 வயதை அடைந்த நிலையில் இச் சிறுமியை 24 மணி நேரமும் யாராவது ஒருவர் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் இச் சிறுமி அதிக சப்தத்துடன் அழுவதால் அருகில் வசிப்பவர்களுக்கும் இத் தம்பதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஜெயா, தனது மாற்றுத்திறனாளி மகளுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். தனது மகளை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
பல தொண்டு நிறுவனங்களிடம் முறையிட்டும் பயனில்லாததால்தான் தாம் இந்த முடிவுக்கு வந்ததாக தாய் ஜெயா தெரிவித்துள்ளார். ஆனால் கருணைக் கொலைக்கு சட்டத்தில் இடமில்லை என்றும் மாற்றுத் திறனாளி சிறுமியை தங்களிடம் ஒப்படைத்தால் பாதுகாக்க தயாராக இருக்கிறோம் என்றும் ஆட்சியர் சண்முகம் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications