இலங்கை சிறையில் விடுதலைப் புலி அடித்துக் கொலை!
கொழும்பு: இலங்கை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி ஒருவர் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இலங்கை வவுனியா சிறையில் கைதிகளாக இருக்கும் விடுதலைப் புலிகள் 38 பேர் கடந்த வெள்ளிக்கிழமை சிறைக் காவலர்கள் மூவரை 18 மணி நேரம் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸாரும் அதிரடிப் படையினரும் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி காவலர்களை விடுவித்தனர். பின்னர் விடுதலைப் புலிகளைப் பிரித்து பல்வேறு சிறைகளில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மீது கொடூர தாக்குதல் ஆரம்பமானது. இரும்புக் கம்பிகளால் புலிகள் தாக்கப்பட்டனர்.
இதில் நெடுங்குளத்தைச் சேர்ந்த நிமலரூபன் பலத்த காயமடைந்து கவலைக்கிடமான நிலையில் ரகமா மருத்துவமனைக்கு நிமலரூபன் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டார். அவருக்கு வயது 29.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 6 விடுதலைப் புலிகள் மஹாரா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த சிறைக் கைதிகளை பார்வையிடச் சென்ற தமிழ் தேசியக் கூட்டணியின் எம்.பிக்கள் நிமலரூபன் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், மாரடைப்பு காரணமாகவே நிமலரூபன் இறந்ததாக சிறைத்துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீரா கதை விட்டுள்ளார்.
பின்னணியில் உருத்திரகுமாரன்-இலங்கை அரசு புகார்:
இதற்கிடையே சுகாதாரத்துறை அமைச்சரும் அரசு செய்தித் தொடர்பாளருமான மைத்திரிபால சிறிசேன கூறுகையில், வவுனியா சிறைச் சம்பவம் புலிகளின் உறுமல் ஆகும். இந்த சம்பவத்தின் பின்னணியில் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்று கூறிக் கொள்ளும் உருத்திரகுமாரன் இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க 500 புலிகள் முயன்று வருகின்றனர் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications