ஆத்தூரில் மணிமுத்தாறு அணையை திறந்துவிடக் கோரி சாலை மறியல்: நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது
தூத்துக்குடி: வெற்றிலை பயிர்களை காப்பாற்ற மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் விடாததால் ஆத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கைது செய்யப்பட்டனர். இதனால் திருச்செந்தூர்-தூத்துக்குடி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆத்தூர் பகுதியில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், விவசாயத்தை பாதுகாக்க மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி ஆத்தூர் குளம் கீழ்பகுதி விவசாயிகள் சங்கம் மற்றும் ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கம் இணைந்து ஆத்தூர் பேருந்து நிலையம் மெயின் பஜாரில் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நேற்று காலை அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். மறியலையொட்டி திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து வாகனங்களும் ஆறுமுகநேரி சாகுபுரம், குறும்பூர், ஏரல், முக்கணி வழியாக தூத்துக்குடிக்கு திருப்பிவிடப்பட்டன. மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த திருச்செந்தூர் துணை தாசில்தார் செல்வி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், வி.ஏ.ஓ. பால் பாண்டியன் ஆகியோர் வந்தனர். ஆனால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு மறுத்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மறியலையொட்டி வடக்கு மற்றும் தெற்கு ஆத்தூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications