புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை அளிக்க திடீர் மறுப்பு

கடந்த திமுக ஆட்சியில் மிகப் பெரும் பொருட் செலவில், அரசினர் ஓமந்தூரார் எஸ்டேட் வளாகத்தில் பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. சட்டசபையும் அங்கு மாற்றப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தக் கட்டடம் கிடப்பில் போடப்பட்டது. அங்கு அரசு மருத்துவமனை அமையப் போவதாக ஜெயலலிதா அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். வீரமணி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில் தமிழக அரசு பெரும் பொருட் செலவில் கட்டிய புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை பல்நோக்கு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றும் திட்டத்தை ரத்து செய்யக் கோரியிருந்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், புதியத் தலைமைச் செயலகத்தை வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் டி.முருகேசன், ஜனார்த்தன ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இந்த நிலையில் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நீதிபதிகள் தீர்ப்பை தெரிவிக்க மறுத்து விட்டனர். மேலும்,இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதை வேறு பெஞ்சுக்கு மாற்றியும் உத்தரவிட்டனர்.
நீதிபதிகளின் இந்த திடீர் முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications